×

அதிமுக கூட்டணியில் நாங்கள் மட்டும்தான் உள்ளோம்: பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி

சென்னை: புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் ஆரம்பத்திலிருந்து நாங்கள் மட்டும்தான் இருக்கிறோம். இடையில் நிறைய கட்சிகள் வந்தார்கள், போனார்கள். சமீபத்தில் கூட எங்கள் கட்சி சார்பாக விழுப்புரத்தில் மாநாடு நடத்தி இருக்கிறோம். தொடர்ந்து என்னுடைய களப்பணிகள் நடந்துக்கிட்டுதான் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இப்போது எம்எல்ஏவாக இருக்கிறேன். ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதி எங்களுக்கு ஒதுக்கி தர அதிமுகவிடம் கேட்க உள்ளோம். ஒரு தொகுதியை போராடி வாங்குவோம்.

அடுத்த வாரத்தில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிக்கை வெளியிடுவோம். எங்களுக்கு வேறு வழியில்லை. அதிமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. நாங்கள் இந்த தேர்தலில் எதிர்கட்சிகளை விட ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவோம். கருத்து கணிப்புகளை வைத்து எடை போட முடியாது. தேர்தல் பணி, களப்பணி சரியாக இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், எங்கள் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுப்போம். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆகட்டும். அவர் சாதியை ஒழிப்பாரா, இல்லையா என்று பின்னர் பார்த்துக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக கூட்டணியில் நாங்கள் மட்டும்தான் உள்ளோம்: பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Jaganmurthy ,CHENNAI ,Pratachi Bharatham Party ,Poovai Jaganmurthy ,AIADMK alliance ,Villupuram ,Poo ,
× RELATED கடந்த 10 ஆண்டுகளாக ஏன் முயற்சி...